மீனம்
பூரட்டாதி 4ம் பாதம், ரேவதி, உத்திரட்டாதி,
நவம்பர் மாதம் மீன ராசியினருக்கு தங்கள் இராசி அதிபதியான குரு 20.11.2020 அன்று திருகணிதப்படி இராசிக்கு 11-ல் வருவதும், ஆண்டு கிரகங்களான ராகு 3-ல் கேது 10-ல் மற்றும் சனி 11-ல் சஞ்சரிப்பதால் தாங்கள் நீண்ட காலமாக எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். இதுவரை இருந்து வந்த பொருளாதார மந்தநிலை மாறி செல்வநிலை மேன்மை அடையும். செய்யும் தொழிலால் முன்னேற்றம் உண்டாகும்.
மகரம் சனி பகவானுடைய ஆட்சி வீடாக இருந்து குரு மகரத்தில் நீசமாகி இணைந்து இருப்பதால், இங்கு நீசமடைவது தவிர்க்கப்பட்டு அது நீசபங்கம் ஆகி யோகமாக மாறிவிடுகிறது.
மேலும் குரு பார்க்க கோடி நன்மை என்றும், கோடி தோஷம் விலகும் என்பதற்கேற்ப இராசிக்கு 11-ல் வரும் குரு தன்னுடைய 5-ம் பார்வையால் மூன்றாம் வீட்டை பார்ப்பதால் தைரியம் மற்றும் புது உத்வேகத்துடன் செயலாற்றி செய்யும் பணிகளை செவ்வனே செய்து முடிப்பீர்கள். சுக போகங்களும் அதிகரிக்கும். குரு தன்னுடைய 7-ம் பார்வையால் ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் பிள்ளைகளால் பெருமையும், அனுகூலங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். தங்களின் மனது ஒரு தெளிவான மன நிலையில் இருப்பதை உணர்வீர்கள்.
குரு தன்னுடைய 9-ம் பார்வையால் ஏழாம் வீட்டை பார்ப்பதால் உடல் நிலையில் இருந்து வந்த உபாதைகள் படிப்படியாக குறைவதை உணர்வீர்கள். தம்பதியர் இடையே இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். அன்னியோன்யம் மேம்படும். கூட்டுத் தொழில் மேம்படும், புனித யாத்திரை செல்லும் யோகம் உண்டாகும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த கால மந்தநிலை விலகும். எடுக்கும் முயற்சிகளில் சுறுசுறுப்பாக செயல்பட்டு ஏற்றத்தைப் அடைவீர்கள். உற்றார் உறவினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மாறி பிரிந்தவர்களும் தேடி வந்து நட்பு பாராட்டுவார்கள். மேலும் மனதளவில் புத்துணர்ச்சியுடன் திகழ்வீர்கள். மருத்துவச் செலவு குறையும்.
உடல் ஆரோக்கியத்துடன் இருக்க தினமும் கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் எடை அதிகரிப்பு, உடல் பருமன் மற்றும் கொழுப்பு கூடுதல் போன்ற பிரச்சனைகள் எதிர் கொள்ள வேண்டி இருக்கும்,
குடும்பம்
உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். குழந்தை இல்லாமல் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்து கொள்வது நல்லது. உங்களுடைய பிள்ளைகள் மேன்மை அடைவார்கள். சிலருக்கு தீர்த்த யாத்திரை , புனிதப் பயணம் போன்ற வாய்ப்புகள் கிடைக்கும். தெய்வ காரியங்களில் கலந்து கொள்வீர்கள். திருமணத்துக்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். மனம் விரும்பும் வண்ணம் நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும்
குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் இருந்துவந்த வீண்வாக்குவாதங்கள் குறையும். குரு பகவானின் சுபப் பார்வை உங்கள் களத்திர ஸ்தானத்தின் மேல் விழுவதால்,கணவன்-மனைவிக்கிடையே நல்லுறவு சிறந்து விளங்கும். பெரியோர்களின் ஆசியும் கிடைக்கப்பெறுவார்கள். உறவினர்களிடம் மற்றும் பங்காளிடம் இருந்த கருத்து வேறுப்பாடுகள் மறையும். காதல் கைகூடும்.
குரு பார்வையால் சகோதரர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். முன்கோபத்தை தவிர்ப்பது பல பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். உங்கள் பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.
உத்தியோகம்
உத்தியோகத்தில் கடந்த கால நெருக்கடிகள் படிபடியாக விலகும். பணியில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலர் பணியின் காரணமாக இடமாறி குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தவர்கள் எதிர்பார்த்திருந்த பணி இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். கல்வி மற்றும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். வேலைபளு குறையும். ஒரு நிரந்தர வருமான நிலையை அடையலாம்.
தொழில் வியாபாரம்
சுயதொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளும் மறைமுக எதிர்ப்புகள் மெல்ல மெல்ல விலகி நல்ல முன்னேற்றம் பெறும். அரசாங்க வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். தொழிலை விரிவு செய்யும் நோக்கம் நிறைவேறும். புதிய கருவிகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணியாட்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். சிலர் புதிய தொழில்/ கூட்டுத்தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் கைகூடி வரும், புதுப்புது யுக்தி, புத்தி யோசனைகள் தோன்றி தொழில் நல்லவிதமாக அமையும். உங்களின் திறமைகள் மெருகேறி, சமயோசித சாமர்த்தியங்கள் மேலோங்கும்.
வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. சொத்து சேர்க்கை ஏற்படும். பணியாளர்களிடையே முழு ஒத்துழைப்பை எதிர்பார்க்கலாம். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.
பங்குச் சந்தை மற்றும் ஊக அடிப்படையிலான முதலீடுகளுக்கு நல்ல வருமானம் தரும்.
பெண்கள்
உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து ஏற்றமிகு பலன்களைப் பெறுவீர்கள் கணவன் மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடப்பதும் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும் நல்லது. தடைபட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடும். குரு பகவானின் சுபப் பார்வை உங்கள் களத்திர ஸ்தானத்தின் மேல் மனம் விரும்பும் வண்ணம் நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும்.பணிபுரியும் பெண்கள் எதிர்பாராத உயர்வுகளை அடைவார்கள். உங்கள் கணவரிடம் நீங்கள் அபாரமான அன்பு, பாசம், பரிவு ஆகியவற்றைக் காட்டுவீர்கள்.
நிதிநிலை
பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. மன நிம்மதி ஏற்படும். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்போர் ஏற்றமான பலன்களை பெற முடியும். புதிய நட்புகள் கிடைத்து பல்வேறு வகையில் வளமான பலனை அடைவீர்கள். நீண்ட நாள் கடன்கள் அடைபடும்
குரு11- ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சரளமாக இருக்கும். வீண் வம்பு வழக்குகளில் இருந்து வந்த சகல பிரச்சனைகளும் விலகி மன நிம்மதி ஏற்படும். இதுவரை உங்களுக்கு வருத்தம் அளித்து வந்த கோர்ட் வழக்குகள் இப்போது முடிவுக்கு வரும். பிறரை நம்பி பெரிய தொகை கடனாகக் கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம்.
அரசியல்
அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த கௌரவமான பதவிகள் கிடைக்கும். தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவுகள் சிறப்பாக அமைந்து மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடித்து மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்வதால் பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.
விவசாயிகள்
பல வகையிலும் ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும்.புதுப்புது யுக்தி முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். பொருளாதாரம் மேன்மையடையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். கடன்கள் குறையும்.
கலைஞர்கள்
உங்களை தேடி நல்ல வாய்ப்புகள் வரும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய அளவிற்கு கதாபாத்திரங்கள் அமையும். தடைப்பட்ட சம்பள பாக்கிகள் கைக்கு கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் சாதகமான பலன்களையும் பெறுவீர்கள். ஆனால் வெளிநாட்டு பயணங்களில் சிறிது தாமதம் ஏற்படக்கூடும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
மாணவ – மாணவியர்
கல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். கடந்த கால மந்த நிலைகள் விலகும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். அரசு வழியில் ஆதரவுகள் உண்டாகும். விளையாட்டுப் போட்டி, கட்டுரை, கவிதை போன்றவற்றில் பரிசுகளைத் தட்டிச் செல்வீர்கள். சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் அமையும். படைப்பாற்றல், புதுமையைப் புகுத்துதல், ஆராய்ச்சில் ஆர்வம் போன்ற உங்களது நற்பண்புகள், நன்கு வெளிப்படும்.
உங்கள் உயர் கல்வி மற்றும் வெளிநாடு சென்று படிக்கும் கனவும் நிறைவேறக்கூடும். உங்களுக்கு தெரிந்தவர்கள் மற்றும் அண்டை அயலார் என அனைவரும்உங்களிடம் ஆதரவாகப் பழகுவார்கள். எனவே, நீங்கள் எங்கு இருந்தாலும் யாருடன் இருந்தாலும் இனிமையாகவும் பயனுள்ளதாகவும் அனுபவிப்பீர்கள்.
பொதுவாக, இந்தப் குருப்பெயர்ச்சி உங்களுக்கு பல நன்மை மற்றும் மேன்மை அளிக்கும் பெயர்ச்சியாக அமையும். எதிர்பாராத திடீர் ஆதாயங்களும், வரவுகளும் அமையும். குடும்பத்திலும், அலுவலகத்திலும் நல்ல பெயர் கிட்டும். வேலை விஷயத்தில் நீங்கள் எடுத்த காரியம் நல்ல முறையில் நிறைவேறும். எனவே மீன இராசியினை பல வாய்ப்புகளை பெற்று தங்கள் கனவுகள் நிறைவேற்றி கொள்வதற்கு, இது சரியான காலம் என்று சொல்லலாம். இவை பொது பலன்களே, அவரவர் ஜாதக அமைப்பு படியே பலங்கள் அமையும்.
பரிகாரம்:
வியாழக் கிழமைகளில், தட்சிணாமூர்த்திக்கு கொண்டக்கடலை மாலையும் பொன்னரளிப்பூ மாலை அல்லது மஞ்சள் நிறப்பூ மாலையும் அணிவித்து வழிபட்டால் தொல்லைகள் பறந்தோடும். துர்க்கையம்மன் வழிபாடு உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாகும்.